தள்ளிக் கொண்டு
குழந்தை நிரம்பிய
குட்டி வண்டியைத்
தள்ளிக் கொண்டு சில
தாய்மார்களும்
குப்பை நிரம்பிய
பெட்டி வண்டிகளைத்
தள்ளிக் கொண்டு சில
தொழிலாளர்களும்
வயதானவர் நிரம்பிய வண்டிகளைத்
தள்ளிக் கொண்டு சில
பணிப்பெண்களும்
விடுமுறைச் சுற்றுலாவுக்கு
வேறு நாடுகளுக்கு
பிள்ளைகளையும் பயணப் பெட்டிகளையும்
தள்ளிக் கொண்டு
குடும்பத் தலைவர்களும்
மாத்திரை கொடுத்தோ
வார்த்தைகள் கொடுத்தோ
வயிற்றில் கொடுத்தோ
தள்ளிக் கொண்டு வந்த
பள்ளிச் சிறுமியைக்
கட்டியணைத்தபடி ஒருகடுக்கன் காரரும்
ஆர்ஸனல் மேன்யூக் கனவுகளை
காலால் தள்ளிக் கொண்டு சில
பந்தாட்டச் சிறுவர்களும்
எதிர்த்த சாப்பாட்டுக் கடையிலிருந்து
பர்மிட்டில்லாக் கையில்
கரண்டி பிடித்து
தள்ளிக் கொண்டிருந்த
மீகொரிங்கைப் போட்டுவிட்டு
நாலாபுறமும் பாய்ந்து எகிறியோடுவோரும்
மாட்டியோரைக் குப்புறத் தள்ளிப்
புறமுதுகில் கைவிலங்கிட்டு
நெட்டித் தள்ளிக் கொண்டு சில
ஊதாச் சீருடைக் காவலரும்
ஒரு பழுப்புப் பூனையைத் தள்ளிக் கொண்டு
ஒருகருப்புப் பூனையும்
போய்க் கொண்டிருக்கிறார்கள்
காற்று தள்ளிக் கொண்டிருக்கும்
என் ஜன்னலின்
திரைச்சீலைக்குப் பின்னால்
வேலை கிடைக்கவில்லையென
வெட்டியாய் ஒரு நாளைத்
தள்ளிக் கொண்டு
வேடிக்கை பார்த்திருக்கும்
என்னைக் கடந்து...
Thursday, October 25, 2007
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Thursday, October 25, 2007
1 commentaires
Libellés : கவிதைகள்
வெட்டு
கூலிக்கி பதிலா
சம்பளம் கிடைச்சென்ன
பதிலுக்குக் கூலியா
பிய்யாரும் கிடைச்சென்ன?
ஐநூறு வெள்ளியாச்சும்
மினிமம் கிடக்கணுமாம்
கிடக்கிறதுக்கா உழைக்கிறது
அமயஞ்சமயத்துக்கு எடுத்துப்புட்டா
ரெண்டு வெள்ளி வெட்டிருது ஏட்டியெம்மு
ஓர்ச்சர்ட்டு ரோட்டுப் பக்கம்
லோரியத் திருப்பிப்புட்டா
திருப்பத்துக்கொண்ணா அது
விருப்பத்துக்கு வெட்டுது ஈயார்ப்பீ
ஏறும் போது தட்டிப்புட்டு
எறங்கும் போது மறந்துப்புட்டா
மொத்தமா வெட்டுது ஈஸிலிங்கு
உருப்படியா ரெண்டு
ஓவர்டைம் கிடைச்சா
அதுலயும் வெட்டுது சீப்பியெ·ப்பு
வெட்டாமக் கிட்டாம
சுளுவாப் பொறந்ததுக்கே
தங்கமாக் கொட்டணும்
தங்கச்சி மகனுக்கு...
நம்மால முடிஞ்சதுக்கு
மாமஞ் சீருக்கு
மோதிரம் வாங்கப்போனா
அஞ்ச வெட்டுது ஜீயெஸ்ட்டி
வந்து சேந்துச்சானு போனடிச்சா
மெல்லிசா இருக்காம் மோதிரம்...
லைன வெட்டுது தங்கச்சி
சிங்டெல்லு ஸ்டார்ஹப்பு
கரண்ட்டு கேபிளு
தண்ணிக்கி குப்பைக்கி
லொட்டுக்கு லொசுக்குக்குனு
பட்டுப்பட்டுனு வெட்டுது ஜைரோ
ஜீரோவுல கூட நிக்கல
மைனஸ்ல ஓடிக்கிட்டிருக்கு மாப்ள!
கிணத்த வெட்டணும்
கம்மாய வெட்டணுன்னு
கடுதாசி வந்திருக்குன்னு
அவசரமா அனுப்பணுன்னு
கைமாத்துக் கேட்டுப்புட்ட
குடுக்காமயா போயிருவம்?
நாளைக்கே...
நாலு நம்பர் அடிச்சுப்புட்டா!
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Thursday, October 25, 2007
1 commentaires
Libellés : கவிதைகள்
Wednesday, October 17, 2007
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Wednesday, October 17, 2007
0
commentaires
Libellés : கண்ணில் பட்டவை
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Wednesday, October 17, 2007
0
commentaires
Libellés : கண்ணில் பட்டவை
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Wednesday, October 17, 2007
0
commentaires
Libellés : கண்ணில் பட்டவை
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Wednesday, October 17, 2007
0
commentaires
Libellés : கண்ணில் பட்டவை
Publié par
சிவஸ்ரீ-----
à l'adresse
Wednesday, October 17, 2007
0
commentaires
Libellés : கண்ணில் பட்டவை